நாடு முழுவதும் திருடு போன மொபைல்களை கண்டறிய புதிய வசதி – மத்திய அரசின் சூப்பர் திட்டம்!
நானும் முழுவதும் திருடு போன மொபைல் போன்களை கண்டறிவதற்காக புதிய இணையதளம் ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
புதிய இணையதளம்:
நாட்டின் அனைத்து வித சேவைகளும் தற்போது இணையமயமாகிவிட்டது. இதனால் மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்தே தங்களின் புகார்களை தெரிவிக்கவும், புகார் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளவும் முடிகிறது. தற்போது தொலைந்து போன மொபைல் போன்கள் குறித்து கண்டறியும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் செயல்படும் வகையில் CEIR என்ற புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இந்த இணையதளத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிப்பட்ட நுழைவு ஐடி வழங்கப்பட்டு தொலை தொடர்பு துறையோடு இணைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை இணைப்பு – வெளியான அப்டேட்!
இந்த இணையதளத்தில் புகார் அளித்தவர்களும் தங்களது தொலைந்து போன செல்போன் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள முடியும். மேலும் இணையதளம் வழியாக புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் அந்த செல்போனில் IMEI எண் முடக்கப்படும். வேறு ஏதேனும் சிம் மூலமாக அந்த மொபைல் இயக்கப்பட்டால் உடனடியாக தொலைத்தொடர்பு துறை மூலமாக காவல்துறைக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.