1-9 ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு சூப்பர் சலுகை – பள்ளிக்கல்வித்துறை முடிவு!!
1 முதல் 9 ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை:
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. அதாவது, காதுகேளாத, பார்வை குறைவு மற்றும் தசைச் சிதைவு உள்ளிட்ட குறைபாடு இருக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் கூடுதல் நேரம், தனி கேள்வி மற்றும் கால்குலேட்டர்கள் வழங்குதல் உள்ளிட்ட சில சலுகைகள் வழங்கப்படுகிறது.
இந்திய வங்கிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை – மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட தகவல்!
ஆனால், 1 முதல் 9 ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு எத்தகைய சகுகைகளும் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், கர்நாடகா அரசு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அதே சலுகை 1 முதல் 9 ஆம் வகுப்பு தேர்விலும் வழங்கப்படும் என பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அறிவித்துள்ளது. அதாவது, 2.5 மணிநேர தேர்வுக்கு கூடுதலாக 50 நிமிடங்களும், இரண்டு மணிநேரத்திற்கு கூடுதலாக 40 நிமிடங்களும், 1 மணி நேர தேர்விற்கு கூடுதலாக 30 நிமிடங்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.