நீட் தேர்வு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு? வெளியான முக்கிய தகவல்!
மத்திய கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நாட்டில் நிலவும் கொரோனா நோய் பரவல் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் நீட் தேர்வை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நீட் தேர்வு:
மருத்துவ சேர்க்கைக்கு மத்திய அரசு சார்பில் நுழைவுத் தேர்வாக நீட் நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக செப்டம்பர் மாதத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நடப்பு ஆண்டான 2021ல் நீட் நுழைவுத் தேர்வு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
SBI ATM கட்டணம் முதல் LPG கேஸ் விலை உயர்வு வரை – ஜூலையில் அமலுக்கு வந்த மாற்றங்கள்!
பொதுவாக நீட் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் நாளில் இருந்து அடுத்த 60 நாட்கள் இடைவெளி வழங்கப்படுவது வழக்கம். காரணம் தேர்வு மைய அனுமதி, இருக்கைகள் அமைத்தல், அனுமதி அட்டை வழங்கல், விண்ணப்பங்களில் மாற்றம் செய்ய அவகாசம் போன்ற பணிகளுக்கான தேசிய தேர்வு முகமை இத்தகைய கால அவகாசத்தை வழங்கி வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் செப்டம்பர் மாதத்திற்கு நீட் தேர்வினை ஒத்திவைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
மத்திய கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சமீபத்தில் தற்போது நாட்டில் நிலவும் கொரோனா இரண்டாவது அலை குறித்து விவாதித்து, நீட் நுழைவுத் தேர்வினை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு தேதிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.