தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

0
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

உலக நாடுகள் எங்கிலும் கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாட்டு குறித்த அச்சம் ஏற்பட்டிருக்கும் நிலையில், இதன் காரணமாக தமிழகத்திலும் ஊரடங்கு விதிக்கப்படுமா என்பது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ்:

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்காவின் ஒரு சில பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாடு தற்போது 17 உலக நாடுகளை ஆக்கிரமித்துள்ளது. தவிர இந்த வகை வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்றும் அது அதிக தாக்கத்தை உருவாக்கக் கூடியதாகவும் கணிக்கப்பட்டிருக்கும் நிலையில், மத்திய அரசு சர்வதேச விமான பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசு 2022 – முதல்வர் ஆலோசனை!

அந்த வகையில் ஓமிக்ரான் வைரஸ் குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய அரசு தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் ஓமிக்ரான் வைரஸின் தடுப்பு ஏற்பாடுகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த வைரஸின் மூலம் இந்தியாவில் 3ம் அலை தாக்கம் இருக்கும் என சொல்லப்பட்டு வரும் நிலையில் முழு ஊரடங்கு குறித்த கேள்விகளும் மக்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொது மக்கள் அனைவரும் முகக்கவசங்களை அணிவது, தடுப்பூசி எடுத்துக்கொள்வது போன்ற கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைகளை பின்பற்றினால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கான சூழ்நிலை ஏற்படாது. தமிழகத்தில் இதுவரை ஓமைக்ரான் வைரஸின் பாதிப்புகள் கண்டறியப்படவில்லை.

சென்னை: மீண்டும் அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் உற்சாகம்!

என்றாலும் சந்தேகத்தின் பேரில் 477 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஒருவருக்கும் புதிய வகை வைரஸ் தொற்று ஏற்படவில்லை என தெரிய வந்துள்ளது. இப்போது மத்திய அரசால் குறிப்பிடப்பட்ட சில நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் வைத்தே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவர்களில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ என குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!