தமிழக மின்சார வாரியத்தில் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் உறுதி!
சென்னையில் உள்ள மின்சார தலைமை அலுவலகத்தில் நேற்று (ஜூன் 20) மின் நுகர்வோர் சேவை மையம் திறக்கப்பட்டது. இதை அடுத்து தற்போது தமிழக மின்சார வாரியத்தில் புதிதாக 1500 பேருக்கு வேலைவாய்ப்பு காத்திருப்பதாக தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மின்வாரியம்:
தமிழகத்தில் கடந்த சில வார காலமாக மின் தடை தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக மக்கள் புகார் எழுப்பி வருகின்றனர். தற்போது மின் தடையை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார தலைமை அலுவலகத்தில் மின் நுகர்வோர் சேவை மையம் நேற்று (ஜூன் 20) திறக்கப்பட்டது. இதனை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் ஜூலை 2வது வாரம் பள்ளிகள் திறப்பு? அரசு திட்டம்!
இந்த மையத்தை தொடர்பு கொண்டு மக்கள் மின் தடை, புதிய இணைப்பு மேலும் தங்களுக்கு தேவையான தகவல்களை கேட்டுக்கொள்ளலாம் என்றும் புகார்களையும் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தகவல் ஒன்றை அளித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, பொதுமக்கள் மின்தடை உள்ளிட்ட குறைகள் குறித்து தெரிவிக்க மின்சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார் தெரிவிக்க 94987 94987 என்ற இலவச எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மின்சேவை மையத்தில் புகார் தெரிவித்த 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புகார்களுக்கு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் தற்போது மின்சேவை மையத்தில் ஒரு ஷிப்டில் ஒரு வாரத்திற்கு 3 பேர் என மொத்தம் 138 பணியாளர்கள் பணிபுரிந்து வருவார்கள். இதை அடுத்து கூடுதலாக 1500 மின் ஊழியர்கள் பணி நியமனம் செய்வது குறித்து சட்டப்பேரவையில் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.