தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் – இனி புற்று நோய்க்கும் இலவச சிகிச்சை!
தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ காப்பீடு:
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கும் நோக்கில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் மக்கள் தனியார் மருத்துவமனைகளில் 5 லட்ச ரூபாய் வரை இலவசமாக இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிகிச்சை பெறலாம். இந்த திட்டத்தில் சேர சில நிபந்தைகளும் உள்ளது. அதன்படி இந்த திட்டத்துக்கான குடும்ப ஆண்டு வருமானம் 1.20 லட்சமாக இருக்க வேண்டும். தற்போது முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் கொரோனா நோய்க்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
அரசின் ஒப்பந்த ஊழியர்களுக்கு 83% அகவிலைப்படி உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!
கடந்த வருடம் முதல்வர் முக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு இத்திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது புற்றுநோய்க்கும் சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் 65% பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்தியாவில் பெண்கள் அதிகம் மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
தமிழகத்தில் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு – பிப்.16 முதல் கூடுதல் தளர்வுகள் அமல்!
ஆண்கள் நுரையீரல், வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். 1 லட்சம் பேரில் 97 பேருக்கு புற்றுநோய் ஏற்படுகிறது. மேலும் அதில் 63 பேர் உயிரிழக்கின்றனர் என்று தகவல் தெரிவித்துள்ளார். புற்றுநோயின் அறிகுறிகளை புரிந்து கொண்டு மக்கள் ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற வேண்டும். தற்போது தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.