கோவில் யானைகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை – அமைச்சர் சேகர்பாபு!
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அனைத்து அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் கோவில் யானைகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனையை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு அவர்கள் கூறியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை:
சென்னை, நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருக்கோயில்களின் மேம்பாடு மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார். அந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை இறைவனுக்கு தொண்டு செய்யும் மிகவும் புனிதமான துறை என கூறி திருக்கோயில்களில் விரைவில் திருப்பணிகளை முடித்து குடமுழுக்கு நடத்துவதற்கு வேண்டிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு வழங்கும் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அர்ச்சகர் மற்றும் ஓதுவார்களுக்கு தனி பயிற்சி பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனை தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் வழக்கத்தினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என முடிவுகள் எடுக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மேலும் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
மேலும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ரூ.625 கோடி மதிப்பீட்டில் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அவற்றை பராமரித்து வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் யானைகளுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் 15 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். விழாக்காலங்களை தவிர மற்ற நேரங்களில் இயற்கையான சூழ்நிலையில் வைத்து பராமரிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.