நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதி !!

0
நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதி !!
நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதி !!

நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதி !!

நாடு முழுவதும் செயல்படும் மருத்துவ கல்லூரிகளை வரும் டிசம்பர் 01ம் தேதி முதல் திறந்து கொள்ள மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கி தற்போது மத்திய அரசு சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

மருத்துவ கல்லூரிகள் !!!

நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. ஆயினும் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது.

அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டாலும் இன்னும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கியே 2 மாதங்கள் ஆன நிலையில் கல்வித்துறை மட்டும் இன்னும் முடங்கியுள்ளதாகவே தெரிகிறது.

டிசம்பரில் மருத்துவ கல்லூரிகள் தொடக்கம் !!!

இதனால் மூடப்பட்டுள்ள கல்லூரிகளை திறக்க அனுமதி அளிக்குமாறு தேசிய மருத்துவ கவுன்சில், மத்திய அரசிற்கு பரிந்துரை செய்தது. இதனை ஏற்ற மத்திய அரசு வரும் டிசம்பர் 01ம் தேதி முதல் அல்லது அதற்கு முன்பாக கூட கல்லூரிகளை திறந்து கொள்ளலாம் என அனைத்து மாநில அரசிற்கும் அனுமதி அளித்துள்ளது.

மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத் துறையின் அனுமதியுடன் கல்லூரிகளை திறந்தாலும், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் உரிய கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!