தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு – இறைச்சி கடைகள் திறந்திருக்குமா?
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று வெகு வேகமாக பரவி வருவதால் கொரோனா 3வது தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இறைச்சி கடைகள் திறந்திருக்குமா?
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இவ்வாறு தொற்று அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள், இரவுநேர ஊரடங்கு மற்றும் வார இறுதி முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தற்போது கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவலால் உருவாகும் கொரோனா 3வது அலையை தடுக்கும் விதமாக இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாநில கல்வித்துறை உத்தரவு!
அதன்படி ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கும், மற்ற வார நாட்களில் இரவு 10 மணி வரை அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய கடைகள், உணவு விடுதிகள் மற்றும் பொது போக்குவரத்து உள்ளிட்டவைகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது அத்தியாவசியப் பணிகளான மருத்துவம், மருந்தகங்கள், பால் விநியோகம், ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவைகள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – அரசுக்கு முக்கிய கோரிக்கை!
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் இறைச்சி கடைகள் திறந்திருக்குமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவியது. அதனை போக்கும் விதமாக தமிழக அரசு ஞாயிற்று கிழமைகளில் இறைச்சி கடைகள் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இறைச்சி கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க கூடுதலாக இறைச்சி கடைகள் செயல்பட சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்பாடு செய்யுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.