ஏழைப்பெண்களின் திருமண உதவித்தொகை ரூ.1 லட்சமாக உயர்வு – அரசு அறிவிப்பு!!
புதுச்சேரி மாநிலத்தில் பழங்குடியின ஏழைப்பெண்களின் திருமண உதவித்தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
திருமண உதவித்தொகை:
தமிழகத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப்பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவி திட்டம் ஆகிய 5 திட்டங்களின் வாயிலாக பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் திருமண உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டது.
தமிழகத்தில் அடுத்து வரும் 2 நாட்கள் மிக கனமழை – ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!
அதாவது, படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும், அதற்கு கீழ் கல்வித்தகுதி பெற்ற பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ. 25 ஆயிரம் ரொக்கபணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் பழங்குடியின ஏழைப்பெண்களின் திருமண உதவித்தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதில், முதற்கட்டமாக 392 பெண்களுக்கு ரூ.1லட்சம் வழங்கவுள்ளதாகவும், இந்த திட்டத்திற்காக ரூ.3.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.