மே 1 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மணிப்பூர் மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு மே 1ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என அறிவித்து உள்ளது. இதனால் ஒருமாத காலம் பள்ளிகள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை:
மணிப்பூர் அரசு அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை மே மாதம் முதல் தொடங்கும் என அறிவித்துள்ளது. இதன் காரணமாக பள்ளிகள் மே 1 முதல் 31 வரை மூடப்படும். கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சில மாநில அரசுகள் கோடை விடுமுறையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
கோடை விடுமுறைக்குப் பிறகு ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. ஆசிரியர், அரசு அதிகாரிகள் விடுமுறையில் தங்கள் உத்தியோகபூர்வ கடமைகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில், டெல்லி, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களும் தங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையை அறிவித்தன.
ஐஐடி மெட்ராஸ், அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு – கொரோனா பரவல் எதிரொலி!!
டெல்லி பள்ளிகளில் கோடை விடுமுறைகள் ஏப்ரல் 20 முதல் ஜூன் 9 வரை இருக்கும். இதற்கிடையில் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.