ஜூன் 7 முதல் 5 நிலைகளில் ஊரடங்கு தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா பாதிப்பு வீதம் மற்றும் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் அடிப்படையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்க மஹாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் நகரங்கள் தோறும் 5 விதமான தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு வீதமானது தற்போது படிப்படியாக சரிந்து வருகிறது. அதனால் முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிக்க மாநில அரசு செய்துள்ளது. முன்னதாக மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு குறைந்த மாநிலங்களில் மட்டும் தளர்வுகளை அளிப்பதாக, அரசு சார்பில் அமைச்சர் விஜய் வதேட்டிவார் அறிவித்திருந்ததை, முதல்வர் அலுவலகம் மறுத்தது. இந்த நிலையில் ஜூன் 7 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிப்பதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் பதிவிறக்கம் செய்வது எப்படி? புதிய வழிமுறை இதோ!!
இந்த தளர்வுகள் 5 வகையாக செயல்படுத்தப்பட உள்ளது. அரசு உத்தரவின்படி, மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளான தானே, வசாய்-விரார், கல்யாண்-டோம்பிவலி அனைத்தும் தளர்வு நிலை 1 ஆக கருதப்படும். அந்த நகரங்களுக்கு (5% க்கும் குறைவான கொரோனா பாதிப்பு வீதம், 75% ஆக்ஸிஜன் படுக்கைகள் வசதி) அனைத்து கட்டுப்பாடுகளிலிருந்தும் தளர்வுகள் அளிக்கப்படும். அதாவது அப்பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள், உணவகங்கள், மால்கள், தியேட்டர்கள், பொது இடங்கள், தனியார் அலுவலகங்கள், விளையாட்டு, படப்பிடிப்பு கூட்டங்கள், திருமணங்கள், இறுதிச் சடங்குகள் ஆகிய அனைத்திற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 14 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு? இன்று அறிவிப்பு!
இதை தொடர்ந்து 2 ஆம் கட்டமாக 5% கொரோனா பாதிப்பு வீதம் மற்றும் 25-40% ஆச்சிஜன் படுக்கைகள் பயன்பாட்டில் உள்ள நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் தளர்வுகள் செயல்படுத்தப்படும். அதில் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற கடைகள் திறக்கப்படலாம். அதே நேரத்தில் மால்கள் மற்றும் தியேட்டர்கள் 50% பொது மக்கள் வருகையுடன் மீண்டும் திறக்கப்படும். மேலும் 3 ஆம் நிலை தளர்வுகளின் படி, 5% முதல் 10% பாதிப்பு விகிதம் மற்றும் 40-60% ஆச்சிஜன் படுக்கைகள் பயன்பாட்டில் உள்ள நகரங்களில் தளர்வுகள் அறிவிக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
இவற்றில் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் அனைத்து நாட்களிலும் மாலை 4 மணி வரை திறக்கப்படலாம். அத்தியாவசியமற்ற கடைகள் வார நாட்களில் ஒரு முறை மட்டுமே செயல்படும். அந்த வகையில் மால்கள் மற்றும் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். கடை உரிமையாளர்கள் மற்றும் ஷாப்பிங் செல்பவர்கள் மாலை 5 மணிக்குள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். நிலை 4 ல் 10-20 % பாதிப்பு வீதம் மற்றும் 60-75% ஆக்சிஜன் படுக்கைகள் பயன்பாட்டில் உள்ள பகுதிகளில் தளர்வுகள் இருக்காது.
ஜூன் 6 முதல் பகல் 12 மணிவரை கடைகளை திறக்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!
அதே போல நிலை 5ல் 20% மற்றும் அதற்கு மேற்பட்ட பாதிப்பு வீதங்களுடன் 75% க்கும் மேலான ஆக்சிஜன் படுக்கைகள் பயன்பாட்டில் உள்ள பகுதிகளில் எந்தவிதமான தளர்வுகளும் இருக்காது. இது தவிர நிலை 1 மற்றும் 2 இல் அலுவலகங்கள் அனைத்தும் 10% பணியாளர்களுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. தளர்வு நிலை1 இல் திருமண விழாக்கள் எவ்வித கட்டுப்பாடுகள் இல்லாமல் நடைபெறலாம். நிலை 2 இல் 50% பேர் மட்டுமே அனுமதிப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.