30,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்.. ஏப்ரலில் பணி நியமனம் – உறுதியளிக்கும் அரசு!

0
30,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்.. ஏப்ரலில் பணி நியமனம் - உறுதியளிக்கும் அரசு!
30,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்.. ஏப்ரலில் பணி நியமனம் – உறுதியளிக்கும் அரசு!

மகாராஷ்ராவில் இன்று (மார்ச் 16) நடைபெறும் ஆசிரியர் தகுதி மற்றும் நுண்ணறிவுத் தேர்வு (TAIT) மூலம் 30,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் தீபக் கேசர்கர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

மகாராஷ்டிரா அரசு சார்பில் இயங்கி வரும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் பல காலியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட 30000 ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று (மார்ச் 16) ஆசிரியர் தகுதி மற்றும் நுண்ணறிவுத் தேர்வு (TAIT) நடைபெறுகிறது. அதில் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியாகும் என மகாராஷ்டிர பள்ளிக் கல்வி அமைச்சர் தீபக் கேசர்கர் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆசிரியர் தகுதி மற்றும் நுண்ணறிவுத் தேர்வு ஆண்டிற்கு இரண்டு முறை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் மாதத்திற்குள் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு அடுத்த கல்வியாண்டில் ஆசிரியர்கள் பணிக்கு வருவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!