தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தல்!
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள ஒரு வழக்கின் விசாரணையில் நீதிபதிகள் அரசு ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என்று அறிவித்துள்ளனர்.
வழக்கு விசாரணை:
மதுரையை சேர்ந்த காவல் ஆய்வாளர் வசந்தி என்பவர் கடந்த 5ம் தேதி சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை ஏமாற்றி பறித்துள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த அந்த நபர் இது தொடர்பாக மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் வசந்தி மற்றும் அவருடன் இருந்த 4 பேரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல் ஆய்வாளர் வசந்தி மீதான குற்றச்சாட்டு உறுதியானதால், அவரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் செப். 3 முதல் 100% திரையரங்குகள் இயங்கும் – உரிமையாளர் சங்க தலைவர்!
இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்துள்ளது. ஆனால் காவல் ஆய்வாளர் தலைமறைவாகியுள்ளதால் அவரை கைது செய்ய முடியவில்லை. இதனால் வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகிறது. இன்னும் காவல் ஆய்வாளரை கைது செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். தாமதப்படுத்துவதால் மனுதாரருக்கு அது சத்தமாக அமைந்து விடும் என்றும் கூறியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இது போன்ற காரியங்களினால் காவல்துறையினர் மீதான நம்பிக்கை மக்களுக்கு குறைந்து விடும். ‘அரசு ஊழியர்கள் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதை ஏற்க முடியாது’ என்றும், காவல் ஆய்வாளர் வசந்தி, ஓட்டுநர் ஆகியோரை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். காவல் ஆய்வாளர் வசந்திக்கு எதிரான ஆவணங்களை முறையாக தாக்கல் செய்ய செப்டம்பர் 2ம் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.