‘மரணத்தின் விளிம்பில் மதுரை ஆதீனம்’ – சோகத்தில் மடாதிபதியினர்!
மூச்சுத் திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த மதுரை ஆதீனத்தின் உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மதுரை ஆதீனம்:
தமிழின் மிகவும் தொன்மையான சமயம் என்று சொல்லக்கூடிய சைவ சமயத்தின் தூன்றுகோலாக உள்ளது மதுரை ஆதினம். இந்த மடம் மேலும், நான்கு சைவ சமய குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தொடங்கப்பட்டது. இந்த புனிதம் மிக்க மடத்தின் ஒட்டு மொத்த செயல்களையும் கவனிக்க கூடிய தலைமை பொறுப்பாளரை மடாதிபதி என்று அழைப்பர். இந்த மடங்கள் ஆன்மிகத்தின் முக்கிய பொறுப்பில் அதாவது சிம்மாசனத்தில் இருப்பவர்களை கவுரவப்படுத்துகிறது.
தமிழக அரசின் சத்துணவில் ரொட்டி, முட்டை வழங்கும் திட்டம் – பள்ளிக்கல்வி ஆணையர் தகவல்!
இப்படிப்பட்ட மதுரை ஆதீன மடத்தின் 292-வது குருமகா சந்நிதானங்களின் மடாதிபதியாக அருணகிரி என்பவர் இருந்து வருகிறார். இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 2011ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தாங்கள் தான் தமிழத்தின் அடுத்த முதல்வர் என்று ஆசி தெரிவித்து அவரின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றவராக இருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் தற்போது மதுரை ஆதீனம் மூச்சுத் திணறல் காரணமாக மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருகிறார். இவருக்கு அவசர சிகிச்சை பிரிவில், தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். அதன் பிறகு இவர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. தற்போது இவரின் உடல்நிலை மிகவும் நலிவடைந்து இருப்பதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதனால் மடத்தில் உள்ள அன்பர்கள் மிகவும் கவலையடைந்து உள்ளனர்.