ஆகஸ்ட் 24ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – நியூஸிலாந்து பிரதமர் அறிவிப்பு!
நியூசிலாந்தில் 6 மாதங்களுக்குப் பிறகு கொரோனா தொற்று பரவல் தொடங்கி உள்ளதால் ஆகஸ்ட் 24ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்து பொதுமக்கள் வெளியில் செல்ல தடை விதித்து வருகின்றன. இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு எதிராக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் – மாநில அரசு அறிவிப்பு!
இதன் விளைவாக தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. அனைத்து நாட்டு அரசுகளும் மக்களின் நலன் கருதி ஒரு சில தளர்வுகளை அளித்து வருகின்றனர். சில நாடுகளில் அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து பரவ தொடங்கிய டெல்டா பிளஸ் வைரஸ் மீண்டும் பாதிப்புகளை அதிகப்படுத்தி வருகிறது. நியூசிலாந்தில் 6 மாதங்களுக்குப் பிறகு ஆக்லாந்து பகுதியில் வசித்து வந்த 58 வயதான நபருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனைத் தொடர்ந்து ஆக்லாந்து மற்றும் கோரமண்டல் பகுதியிலும் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கனவே ஆகஸ்ட் 17 முதல் 20 வரை ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது. தற்போது பாதிப்புகள் அதிகரிப்பதால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு ஆகஸ்ட் 24 வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.