செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் – அமெரிக்க ஆய்வில் தகவல்

0
செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் – அமெரிக்க ஆய்வில் தகவல்
செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் – அமெரிக்க ஆய்வில் தகவல்

செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் அமெரிக்க ஆய்வில் தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்க ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதால் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படலாம் என்ற செய்தி பரவலாக பேசப்படுகிறது. ஆனால் தற்போதைக்கு ஊரடங்கை நீட்டிக்கும் எண்ணம் இல்லை என மத்திய அரசு தெரிவித்து உள்ள நிலையில் அமெரிக்க நிறுவன ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அமெரிக்க ஆய்வு:

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000 ஐ நெருங்கி வருகிறது. நாளுக்கு நாள் உயிர் இழப்புகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து, ஊரடங்கு செப்டம்பர் வரை நீட்டிக்கப்படலாம் என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

பாஸ்டன் எனும் அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒவ்வொரு நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட தேதி, முழு ஊரடங்கா? அல்லது பகுதி ஊரடங்கா? நோய் உச்சமடையும் காலம் போன்ற தரவுகளை மதிப்பீடு செய்து, அந்தந்த நாடுகளில் எவ்வளவு நாட்களுக்கு உத்தரவு நீடிக்கும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதன் படி இந்தியாவில் ஜூன் இறுதி வாரம் அல்லது செப்டம்பர் இரண்டாவது வாரத்திற்கு முன்பு ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!