தமிழகத்தில் ஜனவரி 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அறிவிப்பு!!

0
தமிழகத்தில் ஜனவரி 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - புதிய தளர்வுகள் அறிவிப்பு!!
தமிழகத்தில் ஜனவரி 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - புதிய தளர்வுகள் அறிவிப்பு!!
தமிழகத்தில் ஜனவரி 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில் தற்போது உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது நீட்டிக்கப்பட்டு உள்ள ஊரடங்கில் கோவில்கள் திறப்பு நேரம், காணும் பொங்கல் மெரினா கடற்கரை கொண்டாட்டம் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழக அரசின் நடவடிக்கை மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக நோய்த்தொற்று விகிதம் 1.7 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8,867 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த டிசம்பர் 28ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மருத்துவ குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை முறைகேடு – பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் புது உத்தரவு!!

தற்போது ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் ஜனவரி 31, 2021 நள்ளிரவு 12 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. நோய்கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர பிற இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மேலும் சில தளர்வுகள் வழங்கப்படுகிறது. அவை,

ஜனவரி 1 முதல் உள் அரங்கங்களில் முதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி பெற்று அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்களுடன் நடத்திக் கொள்ளலாம்.

பொங்கல் பரிசு அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்க வேண்டும் – தமிழக முதல்வருக்கு கோரிக்கை!!’

சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளில் பணிபுரியும் நபர்களின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு கிடையாது.

அனைத்து வழிபாட்டு தளங்களிலும் நேரக்கட்டுப்பாடு முறை தளர்த்தப்பட்டு, வழக்கமான நடைமுறையில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களைத் தவிர பிற மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு தமிழகத்தினுள் நுழைய இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். மெரினா உட்பட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!