தமிழகத்தில் ஆகஸ்ட் 3 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கும் வல்வில் ஓரி திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பள்ளி விடுமுறை
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மற்றும் வில் வித்தைகளில் சிறந்து விளங்கிய வல்வில் ஓரி மன்னனின் சிறப்பை போற்றி ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்கள் தமிழக அரசின் சார்பில் மாபெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது. அதாவது, சங்க காலத்தில் வல்வில் ஓரி மன்னன் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லி மலையை ஆட்சி செய்ததன் காரணத்தினால் ஒவ்வொரு ஆண்டும் நாமக்கல் மாவட்டத்தில் மன்னனின் சிறப்பை போற்றும் வகையில் மிகவும் சிறப்பாக தமிழக அரசின் சார்பில் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
SSC CPO SI வேலைவாய்ப்பு 2023 – 1876 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400/-
அந்த வகையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் வல்வில் ஓரி திருவிழா நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் வல்வில் ஓரி திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் மூன்றாம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் டாக்டர் உமா அறிவித்துள்ளார்.