LKG, UKG மற்றும் அங்கன்வாடி மையங்கள் மீண்டும் திறப்பு – மாநில அரசு உத்தரவு!
நாடு முழுவதும் தற்போது கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. அதனால் மாணவர்களின் நலன் கருதி அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
மழலையர் பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. அதனால் தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்து வருகிறது. அதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பின் அடிப்படையில் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் செவ்வாய் கிழமை (நவ.9) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதாவது பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் 1 முதல் 12ம் வகுப்பு வரை திறக்கப்பட்டுள்ளன. அவ்வாறு திறக்கப்பட்டுள்ள பள்ளிகள் பொது சுகாதாரத்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளை அதாவது முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, மற்றும் சானிடைசர் பயன்படுத்தி கைகளை கழுவுதல் உள்ளிட்டவைகளை பின்பற்றி வருகின்றன. பள்ளிகள் திறக்கப்பட்ட ஆரம்ப நிலையில் கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது என்றாலும் தற்போது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேசிய திறனாய்வு தேர்வு!
இதுவரை 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மழலையர் பள்ளிகளும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் இன்று முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளான மழலையர் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களை திறக்க அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா முற்றிலும் குறைந்துள்ளது தெரிய வருகிறது.