நாளை (பிப்.16) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு முக்கிய உத்தரவு!
புதுச்சேரியில் மாசி மகம் தினத்தை முன்னிட்டு நாளை (பிப்.16) அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விடுமுறை அறிவிப்பு:
இந்தியா முழுவதும் பரவி வரும் அடுத்தடுத்த கொரோனாவின் பாதிப்பு காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் தடுப்பு பணியாக கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பாடங்கள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் அரசின் முயற்சிகளால் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த 2021ம் கல்வியாண்டு தொடங்கியது முதல் மீண்டும் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது.
மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு நீக்கம் – அரசு முக்கிய அறிவிப்பு!
அதன் தொடர்ச்சியாக படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வந்தது. மாணவர்கள் வழக்கம் போல பள்ளிகளுக்கு வந்த நிலையில் அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் பரவ ஆரம்பித்தது. அதனால் மீண்டும் பள்ளிகளுக்கு 1 மாதத்திற்கும் மேலாக விடுமுறை அளிக்கப்பட்டது. 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆதார் இணைப்பு கட்டாயம்!
இந்த புதுச்சேரியில் நாளை மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாசி மாதம் பௌர்ணமியும், மகம் திதியும் சேர்ந்து வரக்கூடிய அற்புத நாள் மாசி மகம் என கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இந்துக்கள் விரதம் இருந்து தெய்வ வழிபாடு செய்வர். மேலும் நீர் நிலைகளில் நீராடி வழிபடுவர் இதனை முன்னிட்டு நாளை (பிப்.16) புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.