தமிழக அரசு சார்பில் ‘கப்பலோட்டிய தமிழன்’ விருது – முதல்வர் அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் இனி வரும் ஆண்டுகளில் “கப்பலோட்டிய தமிழன்” விருது வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதே போல் வ.உ.சி நினைவு நாள் “தியாக நாள்” என்று கொண்டாடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
முதல்வர் அறிவிப்பு:
தமிழகத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் சட்டப்பேரவையில் துறைவாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகின்றது. இந்த விவாதத்தில் தான் அந்தந்த துறை அமைச்சர்கள் தங்களது திட்டங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஆகியவை குறித்து அறிவித்து வருகின்றனர். நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உரையாற்றினார்.
வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள் – மத்திய அரசு அறிவிப்பு!
இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சுதந்திர போராட்ட வீரர் “கப்பலோட்டிய தமிழன்” வ.உ சிதம்பரனாரை கவுரவிக்கும் வகையிலும் அவரது 150வது பிறந்தநாள் விழாவிற்காகவும் பல அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதாவது இனி வரும் ஆண்டுகளில் தமிழகத்தில் சாதனையாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு “கப்பலோட்டிய தமிழன்” என்ற விருது வழங்கப்படும் என்று கூறி உள்ளார்.
TN Job “FB Group” Join Now
இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு விருது மட்டுமல்லாமல் 5 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்துடன் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் ஓராண்டுக்கு கட்டப்படும் அரசு கட்டிடங்களுக்கு வ.உ சிதம்பரனார் பெயர் சூட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார். அவரது பிறந்த நாளான நவம்பர் 19ம் தேதி “தியாக திருநாள்” என்ற பெயரில் கொண்டாடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக முதல்வர் அயோத்திதாசர் 175வது ஆண்டு விழாவிற்காக பல்வேறு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.