கொரோனாவுக்கு மத்தியில் பரவும் மஞ்சள் காமாலை – பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு.. மருத்துவர்கள் அறிவுரை!

0
கொரோனாவுக்கு மத்தியில் பரவும் மஞ்சள் காமாலை - பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு.. மருத்துவர்கள் அறிவுரை!
கொரோனாவுக்கு மத்தியில் பரவும் மஞ்சள் காமாலை - பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு.. மருத்துவர்கள் அறிவுரை!
கொரோனாவுக்கு மத்தியில் பரவும் மஞ்சள் காமாலை – பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு.. மருத்துவர்கள் அறிவுரை!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மத்தியில் மஞ்சள் காமாலை நோயால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மஞ்சள் காமாலை:

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 100 க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தடுக்க அரசு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் மஞ்சள் காமாலை நோய் பரவல் வேகம் எடுத்துள்ளது.

தமிழகத்தில் 50 லட்சம் பெண்கள் தினசரி இலவச பேருந்து பயணம் – பாராட்டிய கேரளா குழு!

இந்நோயால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் 10 குழந்தைகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனைகளில் மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெறும் குழந்தைகளின் 500 தாண்டிவுள்ளதாகவும் கூறுகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

தற்போது கொரோனா மற்றும் குழந்தைகளை தாக்கும் இன்புளுயன்சா அதிகரிக்கும் நிலையில், மஞ்சள் காமாலையும் பரவுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரமற்ற நீர் மற்றும் உணவுகளை அருந்துவதால் இந்த மஞ்சள் காமாலை நோய் பரவுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணெய் மற்றும் கார உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை மட்டுமே பருக வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!