இஸ்ரோ PSLV C-51 ராக்கெட் – பிப்ரவரி 28 ஆம் தேதி விண்ணில் பாயும்!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் தனியார் நிறுவனம் தயாரித்த 21 செயற்கைகோளுடன், பிப்ரவரி 28 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரோ PSLV C-51:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு சாதனையாக கருதும் PSLV C-51 ராக்கெட் மூலம் தனியார் துறை வடிவமைத்த செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்ட உள்ளன. இந்த திட்டத்தை சிறந்த திட்டமாக இஸ்ரோ கருதுகிறது. இந்த திட்டத்தின் மூலம் முதன்முறையாக பல தனியார் துறை செயற்கைகோள்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக விண்ணில் ஏவப்படுகின்றன.
UPSC தேர்வை தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!!
தனியார் துறை மூலம் தயாரிக்கப்பட்ட ஆனந்த் என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள், சாடிஷ் சாட் மற்றும் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட யுனிட் சாட் ஆகிய 3 செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. PSLV C-51 ராக்கெட் மூலமாக, பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசோனியா என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளும் சேர்த்து பிப்ரவரி 28 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு!!
இதன் மூலமாக விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. இந்த விண்கலம் மூலம் விவசாயம், பேரிடர், மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் மனிதனை விண்ணுக்கு அனுப்ப செயல்படுத்தப்பட்ட ககன்யான் திட்ட பணிகள் பெரும்பான்மையானவை முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்