10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு IRCTC வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

0
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு IRCTC வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு IRCTC வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு IRCTC வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்! இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் 10ம்  வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் குறித்து இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC வேலைவாய்ப்பு:

  • இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் என்னும் மத்திய அரசின் நிறுவனத்தில் Computer Operator and Programming Assistant (COPA பணிக்கு மொத்தம் 80 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இதனுடன் NCVT / SCVT உடன் இணைக்கப்பட்ட ITI சான்றிதழ்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Computer Operator and Programming Assistant  பணிக்கு விண்ணப்பதாரர்கள் 01.04.2022 தேதியின் படி குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.5000/- முதல் ரூ.9000/- வரை ஊதியமாக அளிக்கப்படும். குறிப்பாக, இந்த பணிக்கு தேர்வு மற்றும் நேர்காணல் எதுவும் நடைபெறாது என்றும், விண்ணப்பதாரர் மெரிட் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 25ம் தேதி ஆகிய நாளை இறுதி நாள் என்று அறிவிடுக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள படி உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

NOTIFICATION 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!