மாணவர்களின் கவனத்திற்கு – அடிப்படை கணினி அறிவியல் மற்றும் ஏஐ பாடத்திட்டம் அறிமுகம்!
பள்ளிக் கல்வித் துறையின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளது.
முக்கிய அம்சம்:
சமீப காலமாக அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் அதை உயர்த்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், எண்ணும் எழுத்தும், வாசிப்பு இயக்கம், கலைத்திருவிழா, கோடைக் கொண்டாட்டம் போன்ற 57 திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை கணிசமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நகை பிரியர்களின் கவனத்திற்கு – இன்றைய தங்கம் விலை என்ன தெரியுமா?
இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறையின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் முக்கிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறன் பாடத்திட்டம் தயார் செய்து ஆசிரியர்களுக்கு பயிற்சியும் மாணவர்களுக்கு மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) சார்ந்த அடிப்படைத் திறன்கள் கற்றுக் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.