இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு டிச. 22 சம்பளம் – மத்திய அரசு உத்தரவு!
இந்தியாவில் உள்ள அரசிதழ் மற்றும் அரசிதழ் அல்லாத ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மத்திய அரசு
இந்தியாவில் அரசு ஊழியர்களின் சம்பளக் கணக்குகளை கையாளும் அனைத்து துறைகள் மற்றும் வங்கிகளின் தலைவர்களுக்கு மத்திய அரசின் நிதித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது அரசிதழ் மற்றும் அரசிதழ் அல்லாத ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு எந்த தேதியில் வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் 2.55 லட்சம் காலி பணியிடங்கள் – அரசின் புதிய திட்டம்!
அதன் படி ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை ஓய்வூதியத்துடன் டிச. 22 ஆம் தேதி மத்திய அரசு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுவாக வழங்கப்படும் தேதியை விட விநியோகத்தை முன்கூட்டியே செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மூலமாக ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.