வங்கிகளில் பணம் எடுக்க தடை.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள் – ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!
இந்தியாவில் முக்கியமான இரண்டு வங்கிகளில் நிதி நிலைமை மோசமாக இருப்பதால் அதன் உரிமங்களை ரத்து செய்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு:
இந்தியாவில் முக்கிய வங்கிகளான அஜந்தா நகர்ப்புற கூட்டுறவு வங்கி மற்றும் பூர்வாஞ்சல் கூட்டுறவு வங்கியில் நிதிநிலமை தொடர்ந்து மோசமாக இருக்கிறது. அதனால் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன் படி இந்த இரண்டு வங்கிகளின் உரிமங்கள் ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த வங்கி வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நாளை முதல் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – வார இறுதி விடுமுறை எதிரொலி!
மேலும் இந்த தடை அடுத்த 6 மாதங்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த வங்கிகளில் கடன் வழங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும் தடை விதித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வங்கிகள் புதிதாக எந்தவொரு பணம் சார்ந்த வணிகத்தில் ஈடுபட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்கள் இந்த வங்கியில் பணம் போட எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக பணம் போட்ட வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில், அவர்களுக்கு காப்பீட்டு உறுதி வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.