இந்தியாவில் இரண்டாவது நாளாக 3 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை தகவல்!
இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,095 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா உறுதி
நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிடியில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. பல உருமாறிய கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதால், அதன் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.
தமிழகத்தில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் – ரூ.420 கோடி மதிப்பில் புதிய திட்டம்!
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,095 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். மேலும் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 15,208 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் எனவும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Follow our Instagram for more Latest Updates