போட்டி தேர்வில் முறைகேடு – 1 கோடி அபராதம் மற்றும் 10 ஆண்டு சிறை!

0
போட்டி தேர்வில் முறைகேடு - 1 கோடி அபராதம் மற்றும் 10 ஆண்டு சிறை!

போட்டி தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு  10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடும் தண்டனை:

போட்டி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு பலரும் கடினமாக உழைத்து வரும் வேளையில் சிலர் குறுக்கு வழியை பயன்படுத்துகின்றனர். அதாவது, வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் மூலம் சிலர் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இதில் கடினமாக உழைத்து தேர்வு எழுதும் சிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, போட்டி தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் கிடைக்கப்போகும் ஜாக்பாட் – முழு விவரம் இதோ!

இது குறித்த மசோதாவானது லோக்சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது. பல அரசு அதிகாரிகளும் இது போன்ற முறைகேடுகளில் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. எனவே, இதனை தடுக்கும் நோக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கணினி மயமாக்கப்பட்ட தேர்வு செயல்முறையை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற, பொதுத் தேர்வுகளுக்கான உயர்மட்ட தேசிய தொழில்நுட்பக் குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!