தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை முடிவு!
தமிழகத்தில் இரு ஆண்டுகளுக்கு பின்னர் பொது தேர்வுகள் நடைபெற உள்ளதால் மாணவர்கள் தரப்பில் இருந்து ஒரு சில கோரிக்கைகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்த விரிவான தொகுப்பை கீழே பார்ப்போம்.
பொது தேர்வுகள்:
தமிழ் நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு பல சிக்கல்களை சந்தித்து தவித்து வந்தது. மேலும் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி போன்ற துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத நாட்களாக மாணவர்களின் கல்வி சீரழிந்து விட்டது என்றே கூறலாம். மேலும் இந்த கொரோனாவின் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் இருந்த போது பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. இந்த வகையில் மாணவர்கள் பாடத்தை கற்றாலும் பள்ளிக்கு சென்று அங்கு இருக்கும் சூழலில் பாடம் கற்பது மிகவும் சிறந்ததாக இருந்து வந்தது. இதனை இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இழந்து வந்தனர். இந்நிலையில் சென்ற இறுதியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10,11, 12 வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்ததாக வரவுள்ள பொதுத் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு? வலுக்கும் கோரிக்கை!
அதன்படி, தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும். மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 23ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், ஜூன் 17 வெளியிடப்படும். பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை http://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான கால அட்டவணை ஒன்றை தயாரித்து அதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் முடிந்த நிலையில் வரும் 18 ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி வரை மூன்றாவது திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தாக, 25 ஆம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்க உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் தரப்பில் இருந்து பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் அல்லது இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான பாடத்திட்ட அடிப்படையில் பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டு வருகிறது. இதற்காக, சேலம் மாவட்டத்தில் 80 மாணவ மாணவிகள் சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் இவ்வாறு மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொதுத்தேர்வு எழுதும் போது மன அழுத்தத்துடன் எழுதக்கூடாது எனவே பள்ளிக்கல்வித்துறை என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.