விபத்து நேர்ந்தால் 10 ஆண்டு சிறை – அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.. சட்டத்தில் திருத்தம்!
இந்தியாவில் சாலை விபத்து தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு வாகன ஓட்டுனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
சட்ட திருத்தம்:
இந்தியாவில் சாலை விபத்தை ஏற்படுத்தி விட்டு யாருக்கும் தெரியாமல் தப்பி ஓடும் ஓட்டுனர்களுக்கான சிறை தண்டனை காலத்தை அதிகப்படுத்தி சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது புதிய பாரதிய நியாய சங்ஹிதா சட்டப்படி சாலை விபத்தை ஏற்படுத்தி தப்பி செல்லும் வழக்குகளில் ஓட்டுநர்களுக்கான சிறை தண்டனை இரண்டு ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தம் வாகன ஓட்டுநர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் லாரி ஓட்டுநர்கள் மும்பை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை காவலர்கள் அடித்து விரட்டியதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல ஹரியானாவிலும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் சட்ட திருத்தத்தை எதிர்த்து பேருந்துகளை இயக்க மறுத்து தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
தமிழக சமூக நலத்துறையில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!