தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு – டவ்தே புயல் எதிரொலி!!
அரபிக்கடலில் நிலை கொண்டிருக்கும் டவ்தே புயல் காரணமாக இன்று முதல் 18 ஆம் தேதி வரை தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு:
அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை வலுவான புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு டவ்தே என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது மியான்மர் நாடு வைத்த பெயர் ஆகும். டவ்தே என்பது மியான்மரில் உள்ள ஒரு பல்லி இனம் என்று கூறப்படுகிறது. இந்த புயல் வருகிற மே மாதம் 18 ஆம் தேதி குஜராத் அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து? கல்வி அமைச்சக அதிகாரிகள் விளக்கம்!!
இந்த புயல் காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தின் கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (மே 15) மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக கேரளா, கர்நாடகம், தமிழகம், மராட்டியம், கோவா, குஜராத் மாநிலங்களில் புயல் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.