அரசு வேலை உங்களது கனவா? உடனே விண்ணப்பித்து பயனடையுங்கள்!
அரசு வேலை பெறுவதை கனவாக கொண்டு பலரும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு பயனடையுமாறு இந்த வார வேலைவாய்ப்பு செய்திகளின் தொகுப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையலாம்.
அரசு வேலை:
Central Pollution Control Board (CPCB) ஆனது Scientist ‘B’, Assistant Law Officer, Assistant Accounts Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 163 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி,12ம் வகுப்பு தேர்ச்சி, Degree, Bachelor’s Degree in Engineering, Bachelor’s degree in Law, Master’s Degree, Ph.D, Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ்நாடு அஞ்சல் துறையானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Staff Car Driver பணிக்கென காலியாக உள்ள 58 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.
Agniveer Vayu பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 350 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு ,12ம் வகுப்பு, Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 31.03.2023ம் தேதி அதாவது இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையலாம்.