தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் இயங்க அனுமதி – வழிகாட்டு நெறிமுறைகள்!
தமிழகத்தில் இன்று (ஜூன் 7) முதல் வருகின்ற 14ம் தேதி வரை தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் சார்பதிவாளர் அரசு அலுவலகம் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
சார்பதிவாளர் அலுவலகம்:
தமிழகத்தில் இன்று (ஜூன் 7) காலை 6 மணி முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில் தற்போது தளர்வுகள் அடங்கிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் அரசு அலுவலகங்கள் 30 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சார்பதிவாளர் அலுவலகமும் சில கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சில வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் சார்பதிவாளர் அலுவலகம் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அலுவலகத்தை, பகுதிக்கு அருகே உள்ள டிஐஜி, மாவட்ட பதிவாளர் அலுவலகம் அருகே தற்காலிகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆவணத்தில் சம்பந்தப்பட்ட நபர் எவரேனும் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்தால் அவர்களது மனுக்களை பரிசீலிக்க தேவையில்லை என்றும் இதனை சார்பதிவாளர் அறிந்து உரிய திருப்பு சீட்டு வழங்கி பதிவினை நிராகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட சில பாதுகாப்பு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று முதல் கடைகள் திறப்பு – புதிய தளர்வுகள் அமல்!
பாதுகாப்பு நெறிமுறைகள்:
- அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் 50 சதவிகித டோக்கன்கள் வழங்கப்பட்டு இயங்க அனுமதி.
- அலுவலகத்திற்கு வெளியே பொதுமக்கள் தேவையின்றி கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
- அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றினை பதிவு செய்ய தனி பதிவேடு பராமரிக்க வேண்டும்.
- அலுவலக நுழைவு வாயிலில் வாஸ்பேஷன் அல்லது கை கழுவிடம் அமைத்தல் அல்லது சானிடைசர் வைத்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா 3 ஆம் அலை பரவல் – தடுப்பு வழிமுறைகள் இதோ!!
- சார்பதிவாளர், உதவியாளர் என அனைவரும் வெவ்வேறு விரல் ரேகை இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்.
- பொதுமக்களிடம் விரல் ரேகை பெறுவதற்கு தனியாக இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்.
- ஆவண பதிவுக்கு தாக்கல் செய்பவர் மட்டுமே முதலில் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். பின்பு சம்பந்தப்பட்ட நபர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
- ஆவணத்தை பொதுமக்கள் ஒரே வருகையில் திருப்பி தருவதன் மூலம் மக்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
- பணியாளர்கள் அனைவரும் மாஸ்க், கிளவுஸ் அணிந்து பதிவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
- பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் ஒரு நாளைக்கு 50 டோக்கன்கள் என வழங்க வேண்டும்.