அரசு சுகாதார திட்டங்களை தொடர்வதில் சிக்கல் – தவிக்கும் மக்கள்!
அரசின் மருத்துவ திட்டங்களை தனியார் மருத்துவமனைகளில் தொடர்வதற்கு புது சிக்கல் எழுந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சுகாதாரத் திட்டங்கள்:
மாநில அரசுகள் ஏழை எளிய மக்களுக்கான சுகாதார திட்டங்களை தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்திக் கொள்வதற்கான வசதிகளை செய்துள்ளது . இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் அரசின் சுகாதார திட்டம் மற்றும் சிரஞ்சீவி ஆகிய இரண்டு திட்டங்களையும் குறித்து தற்போது அதிக பரபரப்பு எழுந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகளுக்கான செலவுகளை அரசு வழங்குவதில் அதிக கால தாமதத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக கோடி கணக்கில் தனியார் மருத்துவமனைகளுக்கான பணம் நிலுவையில் உள்ளதாகவும், அரசு மற்றும் காப்பீடு நிறுவனங்களுக்கு இடையே இந்த திட்டங்களில் ஏராளமான ஊழல்கள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஒப்புதல் – முதல்வர் அறிவிப்பு!!
இதன் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தின் தனியார் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம் சங்கத்தின் தலைவர்கள் இத்திட்டத்தை எதிர்காலத்தில் தொடர்வது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சிரஞ்சீவி திட்டத்தின் கீழ் பலன்கள் 25 லட்சத்திலிருந்து 50 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.