வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கான ஒப்பந்தம் தொடர்பான புதிய விதியினை கோவா அரசு மாற்றம் செய்துள்ளது.
ஒப்பந்தம்:
கோவா அரசு தற்போது வீட்டு வாடகை, குத்தகை மற்றும் வெளியேற்றம் தொடர்பான விதிமுறைகளை திருத்தம் செய்துள்ளது. அதாவது, தற்போது அரசு வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றம் தொடர்பான முக்கிய விதியை திருத்தம் செய்துள்ளது. அதாவது, ஒப்பந்த காலம் முடிந்தும் வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபர் வீட்டை காலி செய்ய தவறினால் மூன்று மாதங்கள் வரையிலும் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில நேரங்களில் இரண்டு தண்டனையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் வாடகை வீட்டுக்கு செல்லும்போது கட்டாயமாக குத்தகை ஒப்பந்தம் மற்றும் விடுமுறை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!