ரூ.6000 நிவாரணம் வழங்குவதில் முறைகேடு – வங்கி மூலமாக வழங்க கோரிக்கை!!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு முழுமையாக பணம் சென்றடைய வேண்டுமெனில் ரூ.6000 நிவாரணம் வங்கி மூலமாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நிவாரணம்:
தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 30 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.6,000 மற்றும் வெள்ளத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கி கணக்கு மூலமாக இந்த நிவாரணத்தொகை வழங்கினால் வங்கியிலேயே சில பணம் பிடிக்கப்பட்டுவிடும். மொத்த நிவாரண தொகையையும் பொதுமக்கள் பெற வேண்டும் என்பதற்காகவே ரேஷன் கார்டு மூலமாக ரொக்கத்தொகையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வெங்காயத்தின் விலை ரூ.40ஆக குறைப்பு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
இந்நிலையில், நிவாரணத்தொகையை அரசு வங்கியின் மூலமாகவே வழங்க வேண்டும் என சென்னையை சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது, ரேஷன் கடைகளின் மூலமாக நிவாரணத்தொகை வழங்கினால் அதில் பெருமளவில் முறைகேடு நடைபெற வாய்ப்பிருக்கிறது. இதனால், தகுதியானவர்களுக்கு நிவாரணம் சென்றடையாமல் போகலாம். அரசின் பல நிதிகளுக்கான பணம் வங்கி கணக்கின் மூலமாகவே அனுப்பும் நிலையில் நிவாரணத்தொகையையும் வங்கி மூலமாகவே அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆராய்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியாக நிவாரணம் சென்றடைய உதவுமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.