புகழ்பெற்ற மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு – மத்திய அரசு அறிவிப்பு!!
மதுரை மல்லிகை பூவிற்கு, ஒரு குறிப்பிட்ட நாட்டை சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு அளிக்கப்படும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புவிசார் குறியீடு:
இந்திய கலாச்சாரத்திலும், பாரம்பரியத்திலும் பூக்கள் இணைந்துள்ளது. குறிப்பாக மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து சுபகாரியங்களுக்கு பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறு நமது வாழ்க்கையோடு இணைந்த பூக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மதுரை மல்லிகை பூ உள்ளது. மதுரை என்றாலே மல்லிகை பூ என கூறும் அளவிற்கு பிரபலமாக உள்ளது.
Airtel, Jio, Vi நிறுவனங்களின் 1.5 ஜிபி மற்றும் 2 ஜிபி டேட்டா திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!!
மற்ற ஊர் மல்லிகை பூ போல இல்லாமல் இதில் தனிப்பட்ட சிறப்பு உள்ளது. மற்ற ஊர்களில் விளையும் பூக்கள் விரைவாக வாடிவிடும். ஆனால் மதுரை மல்லி நெருக்கமான இதழ்களை கொண்டுள்ளது. அதனால் எளிதில் வாடாது. இவ்வாறு சிறப்புமிக்க மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும். மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் அறிவுசார் சொத்துரிமை கழகம் தான் இக் குறியீட்டை வழங்குகிறது. இவ்வாறு புவிசார் குறியீடு வழங்குவது மூலமாக அந்த பொருளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கிறது. தற்போது புவிசார் குறியீடு சான்றளிக்கப்பட்ட மதுரை மல்லி மற்றும் பிற பூக்கள் அமெரிக்கா மற்றும் துபாய்க்கு தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும்.