ஜி-20 உச்சி மாநாடு நிறைவு – அடுத்த மாநாட்டை நடத்தும் அதிகாரம் பிரேசில் நாட்டு அதிபரிடம் ஒப்படைப்பு!
டெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு இன்றுடன் நிறைவு பெற்றுள்ள நிலையில் அடுத்த மாநாட்டை நடத்தும் அதிகாரம் பிரேசில் நாட்டு அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜி-20 உச்சி மாநாடு:
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நேற்று துவங்கப்பட்ட ஜி-20 உச்சி மாநாடு இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்தாண்டு, ஜி-20 உச்சி மாநாட்டிற்கான பொறுப்பை இந்தியா ஏற்ற நடத்தி வந்தது. அதாவது, இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மொரிசியஸ், வங்க தேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அதாவது, ஜி20 உச்சி மாநாட்டில் அரசு ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
மாநிலத்தில் டெங்கு, சிக்குன்குனியா தொற்று நோய் பரவல் தீவிரம் – முதல்வர் அதிரடி உத்தரவு!
அடுத்ததாக, இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டை தொடர்ந்து அடுத்த மாநாட்டை நடத்தும் அதிகாரத்தை பிரதமர் மோடி அவர்கள் பிரேசில் நாட்டு அதிபரிடம் ஒப்படைத்துள்ளார். மேலும், டிசம்பர் 2023 வரையிலும் ஜி20 மாநாட்டிற்கான தலைமைப் பொறுப்பில் பிரதமர் நரேந்திர மோடி இருப்பதால் நவம்பர் மாதத்தில் காணொலி காட்சி மூலமாக ஒரு கூட்டத்தை நடத்தவிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.