தமிழக தனியார் நிறுவனங்கள் மூலம் இலவச தடுப்பூசி – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் மூலம் தனியார் மருத்துவமனைகளில் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டம் அமல்பட இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.
தடுப்பூசி திட்டம்:
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு முன்னதாக முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. அதன்படி, முதலில், முன்கள பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கும், அடுத்தகட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் செலுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டது. முதலில் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் தடுப்பூசி போடுவதற்கு பயந்தனர்.
சதுரகிரி மலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – அனுமதி வழங்கல்!
பின்னர் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு போட்டுக் கொள்ள ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால் தொடர்ந்து கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை, 1 கோடியே 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தினசரி 7 லட்சம் ஊசிகள் போடும் அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆனால் தினசரி ஒதுக்கீடாக 4 முதல் 5 லட்சம் ஊசிகள்தான் கிடைக்கிறது. தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மத்திய அரசு கடந்த மாதம் அளித்த தடுப்பூசிகளில் 25% தனியார் மருத்துவமனைக்கு விற்பனை செய்யப்பட்டது. விலை கொடுத்து ஊசி போட்டுக் கொள்ள சிலர் தயங்குகின்றனர். இதனால் அவை வீணாகிறது. அதனால், பெரிய தொழில் நிறுவனங்கள், கம்பெனிகள் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசிக்கான கட்டணத்தை செலுத்தி விடும்படி அறிவுறுத்தியுள்ளோம். இதனால் தனியார் மருத்துவமனைகளில் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடா முடியும் என்றும், இந்த திட்டம் விரைவில் செயல்படுத்த உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.