ஆதார் அட்டை புதுப்பிக்கும் இலவச முறைக்கு மார்ச் 14 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கு காண்போம்.
இலவச ஆதார் அப்டேட்:
ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவரும் வருகின்ற டிசம்பர் 15,2023 முதல் மார்ச் 14, 2024 வரை உங்கள் விவரங்களை myAadhaar போர்ட்டல் மூலம் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கவில்லை என்றால், ஆதார் விவரங்களைப் புதுப்பிக்க UIDAI கடந்த பல மாதங்களாக அறிவிப்பை வெளியிட்ட வண்ணம் உள்ளது.
NEET UG 2024 தேர்விற்கான அறிவிப்பு வெளியீடு – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!
இலவசமாக புதுப்பிக்க பல முறை கால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும், இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால் இதுவரை புதுப்பிக்காதவர்கள் உடனே செய்யுமாறு UIDAI தற்போது வலியுறுத்தி வருகிறது. ஆதார் மையங்களுக்குச் சென்று ஆதார் விவரங்களை புதுப்பிக்கச் சென்றால் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பல மோசடிகளை தடுக்க மக்கள் தங்களின் ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.