CBSE 10 & 12ம் வகுப்புகளுக்கு முதல் பருவத்தேர்வு – கல்வி வாரியம் விளக்கம்!
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (CBSE) 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியிடப்படவில்லை என CBSE நிர்வாகம் அறிவித்துள்ளது.
தேர்வு விளக்கம்
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று ஓய்ந்திருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. இதனுடன் கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (CBSE) பள்ளிகள் கடந்த ஜூன் மாதம் முதல் திறக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 30 நாட்கள் ஊதியம் – அரசு அறிவிப்பு!
இப்போது கல்வி நாட்காட்டியின் படி அடுத்து வரும் மாதங்களில் CBSE பள்ளிகளில் பருவத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆனால் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்வுகள் நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. ஆனால் CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுவதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.
நவ.1 முதல் 3 வரை ரேஷன் கடைகள் காலை 8 மணிமுதல் இயங்கும் – தமிழக அரசு உத்தரவு!
அதில் CBSE தேர்வு நடைபெறும் சில தேதிகளும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்வுகள் தொடர்பாக அறிக்கைகளை வெளியிட்ட CBSE கல்வி வாரியம், ’10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான முதல் பருவத்தேர்வு தேதிகள் குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலியான தேர்வு தேதி பட்டியலை நம்ப வேண்டாம்’ என விளக்கம் கொடுத்துள்ளது.