முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர் பணியிடம் நிரப்பல் – அமைச்சர் உறுதி!
கர்நாடகா மாநிலத்தில் பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்பட இருக்கிறது.
ஆசிரியர் பணியிடம்:
கர்நாடக மாநிலத்தில் ரெகுலர் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டவுடன் பியு கல்லூரிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு பள்ளிகளில் போதுமான உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் விளையாட்டுத் திறன் பாதிப்படைவதாகவும், மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் இல்லாத சூழலும் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது எனவே, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
மேலும், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 500 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியரை நியமிக்க உள்ளதாகவும், அரசு பள்ளிகளுக்கு இணையாக அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.