தமிழகத்தில் கூடுதல் நிவாரணத் தொகை – வலுக்கும் கோரிக்கை!!

0
தமிழகத்தில் கூடுதல் நிவாரணத் தொகை – வலுக்கும் கோரிக்கை!!

தமிழகத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நிவாரணம்:

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தினால் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன வளாகத்தில் தேக்கி வைத்திருந்த கச்சா எண்ணெய் வெள்ள நீருடன் கலந்து பல்வேறு பொதுமக்களை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும், இந்த கச்சா எண்ணெய் கழிவுகளில் பல்வேறு மீனவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள் அனைத்தும் சிக்கி மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

டிச.28ம் தேதி முதல் புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்கள் – முதல்வர் அறிவிப்பு!

இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் எண்ணூரில் ஏற்பட்டு எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 6700 பேருக்கு ரூ. 7500 நிவாரணமும், மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணமும் படகுகளை சரி செய்வதற்காக ரூ. 10000 நிவாரணமும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்வதற்கு ஏதுவாக ஒரு படகிற்கு தலா ரூ. 50,000 நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், மீன்பிடி வலைக்கு ரூ. 25,000, கட்டுமரத்திற்கு ரூ. 20000, கண்ணாடி இலை படகிற்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!