அரசு பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூல் – தவிக்கும் மக்கள்!

0
அரசு பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூல் - தவிக்கும் மக்கள்!
அரசு பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூல் - தவிக்கும் மக்கள்!
அரசு பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூல் – தவிக்கும் மக்கள்!

தமிழக அரசு பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ள நிலையிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கூடுதல் கட்டணம்:

தமிழகத்தில் தனியார் பேருந்துகள் தான் அரசு நிர்ணயத்துள்ளதை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் முன்னதாக இருந்தது. ஆனால் தற்போது தனியார் பேருந்துகளை போலவே அரசு பேருந்துகளும் அரசு நிர்ணயித்துள்ளதை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கோவையிலிருந்து பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், உள்ளிட்ட நகரங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

ஆனால் கோவையில் இருந்து மதுரை, திருச்சி , தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர் போன்ற நகரங்களுக்கு அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் எக்ஸ்பிரஸ், பைபாஸ் ரைடர், ஏசி, சொகுசுபஸ் என்ற பெயர்களில் ரூபாய் 30 முதல் 50 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் பேருந்துகளில் இந்த உத்தரவு கடைபிடிக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு கூடுதல் பேருந்துகள் – அமைச்சர் முக்கிய தகவல்!

இதனால் பொதுமக்கள் சார்பில் அதிக கட்டணம் குறித்து மாவட்ட போக்குவரத்து அதிகாரி விசாரணை செய்து கூடுதல் கட்டணம் பெறுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நகரங்களுக்கு இடையிலான பேருந்து கட்டணத்தை ஆய்வு செய்து இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயனடைவார்கள் என்றும் கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!