PF எனப்படும் வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வந்ததுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கு பார்ப்போம்.
புதிய விதி:
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO) அதன் உறுப்பினர்களுக்கு ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி இபிஎப் அமைப்பில் இருக்கும் உறுப்பினர்கள் ஒரு நிறுவனத்தை விட்டு மற்றொரு நிறுவனத்திற்கு சென்றால் அவர்களின் இபிஎஃப் (EPF) தொகை தானாகவே பழைய நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்திற்கு மாற்றி அமைக்கப்படும். இதற்கு உறுப்பினர்கள் 3 விண்ணப்ப படிவங்கள் போன்ற படிவங்களை பயன்படுத்த வேண்டிய எந்த வித அவசியமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது .இதை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
TET தேர்வு எழுத போறீங்களா? அப்போ உடனே பாருங்க – உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
பணியாளர் ஒருவர் தனது பழைய நிறுவனத்திலிருந்து புதிய நிறுவனத்திற்கு மாறும் போது அவரின் UAN நம்பர் புதிய நிறுவனத்திற்கு மாற்ற வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அவர்களின் EPFO அக்கவுண்டில் பணம் ஏற்றப்படும். இதை செய்யும் போது பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதால் மத்திய அரசு தற்போது இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது