EPFO பயனாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு? வெளியான முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, அதிக ஓய்வூதிய அமலாக்கம் குறித்து புதுப்பிக்கப்பட்ட FAQகளை வெளியிட இருக்கிறது.
EPFO அறிவிப்பு
இந்தியாவில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதிக ஓய்வூதிய அமலாக்கம் குறித்து புதுப்பிக்கப்பட்ட FAQகள் குறித்து உச்சநீதிமன்ற உத்தரவு வெளியிட்ட நிலையில், அது குறித்த தொகுப்பை வெளியிட்டுள்ளது. இது ஓய்வூதிய நிலுவைத் தொகைகள் கிடைக்குமா என்ற கேள்விக்கு பதில் வழங்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் EPFO உயர் ஓய்வூதியம் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என தெரியாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுமதிப்பீடு – பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு!!
அதனால் அதிக ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் ஜனவரி மாதத்திற்குள் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அதிக ஓய்வூதியம் கேட்டு 17.49 லட்சம் விண்ணப்பங்கள் வந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.