திருச்சியில் நாளை (அக்.8) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – முழு விபரங்கள் இதோ!
திருச்சி மாவட்டத்தில் அக்டோபர் 8 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வேலை தேடுவோர் இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு :
தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. கொரோனாவால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமான மக்கள் தங்களின் அன்றாட வேலைகளை இழந்து மாத வருமானமின்றி சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அரசு மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி தனியார் துறைகள் மூலம் மாதந்தோறும் அந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தனியார் துறை சார்பாக வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு அசல் சான்றிதழ் பெற்றுக் கொண்ட மாணவர்கள் கவனத்திற்கு – அரசு தேர்வுத்துறை!
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து திருச்சியில் அக்டோபர் 8 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. கொரோனா பரவலால் நிறுத்தப்பட்டிருந்த வேலைவாய்ப்பு முகாம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கல்வி தகுதி சான்றிதழ்கள், ஆதார், பான், உள்ளிட்ட அடையாள அட்டைகளின் நகல்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
1 முதல் 8ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பில் புதிய திருப்பம் – ஆளுநர் விளக்கம்!
இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் 10 ம் வகுப்பு முடித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆகியோர் பங்குபெறலாம். வேலை வாய்ப்பை தேடுவோர் இந்த முகாமை பயன்படுத்தி நேர்காணலில் பங்கேற்று பயனடையலாம்
என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.