பணியிடங்களில் முதலுதவி பெட்டி இருப்பது கட்டாயம் – தமிழக அரசு அறிவிப்பு!

0
பணியிடங்களில் முதலுதவி பெட்டி இருப்பது கட்டாயம் - தமிழக அரசு அறிவிப்பு!
பணியிடங்களில் முதலுதவி பெட்டி இருப்பது கட்டாயம் - தமிழக அரசு அறிவிப்பு!
பணியிடங்களில் முதலுதவி பெட்டி இருப்பது கட்டாயம் – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் முதலுதவி பெட்டி இருப்பது அவசியம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதலுதவி பெட்டி:

தமிழக அரசு குடிமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் என பலருக்கும் ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது தமிழகத்தில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கான அறிவிப்பினை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, வணிக நிறுவனங்களில் கட்டாயமாக முதலுதவி பெட்டியை வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது, ஒரு வணிக நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்தால் கட்டாயமாக முதலுதவி பெட்டியை அலுவலகங்களில் வைக்க வேண்டும்.

தமிழகத்தில் கனமழையால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு – முழு பட்டியல் இதோ!

மேலும், நிறுவனங்களில் வைக்கப்படும் இந்த முதலுதவி பெட்டியை முறையாக கையாள வேண்டும் எனவும், அனைத்து ஊழியர்களுக்கும் தெரியும் வகையில் பொதுவான இடத்தில் முதலுதவி பெட்டியை வைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, அந்த முதலுதவி பெட்டியில் சாதாரண காய்ச்சல், சிறு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் படியான அனைத்து மருந்துகளும் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், பொதுவான அனைத்து மருந்து மாத்திரைகளை எப்பொழுதும் இருப்பில் இருக்கும்படி கவனித்துக்கொள்ள வேண்டும்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!